தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுரை விமான நிலைய பெயர் விவகாரம் முற்றுப்புள்ளி வைத்த பிரச்னையை மீண்டும் தூண்டி விடும் எடப்பாடி: கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 2026 தேர்தலில் ஒற்றை கருத்துடைய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி தான் அமையும். ஜன. 7ம் தேதி புதிய தமிழகம் கட்சி கூட்டணி குறித்து மதுரை மாநாட்டில் அறிவிக்கப்படும். தேர்தல் நேரத்தில் ஒரு சமுதாய வாக்குகளை வாங்குவதற்காக விமான நிலையத்திற்கு தலைவர்கள் பெயரை சூட்டுவேன் என எடப்பாடி அறிவிப்பதால் மற்ற சமுதாயத்தின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும்.

Advertisement

ஒவ்வொரு சமுதாயமும் ஒவ்வொரு சமுதாய தலைவர் பெயரை சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் அது சாத்தியமாகுமா? முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட பிரச்னையை மீண்டும் தூண்டும் விதமாக அமைந்து விடும். சாதி என்ற சகதிக்குள் எடப்பாடி சிக்காமல் இருப்பது நல்லது. தேர்தல் நேரத்தில் கவனமாக மூத்த அரசியல்வாதிகள் கையாள வேண்டும். ஒரு சமுதாயத்தினரை தூக்கி பிடித்து பேசக்கூடாது. இதனால் தேர்தல் நேரத்தில் மற்ற சமுதாய எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். அதிமுக ஆட்சி முடியும் நேரத்தில் 10.5 சதவீத இடஒதுக்கீட்டை எடப்பாடி அறிவித்தார். அதன் விளைவால் தேர்தலில் தோல்வியை தழுவினார். இவ்வாறு கூறினார்.

Advertisement