தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

அவனியாபுரம்: மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் இன்று காலை தீவிர சோதனை நடைபெற்றது. மதுரை விமான நிலைய இயக்குனருக்கு நேற்றிரவு வந்த மின்னஞ்சலில், விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தார்.

Advertisement

இதையடுத்து, மதுரை விமான நிலைய உள்வளாகம் மற்றும் வெளி வளாக பகுதிகளில் அங்கு பணியில் இருக்கும் ஒன்றிய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தமிழக போலீசார் இணைந்து இன்று காலை தீவிர சோதனை மேற்கொண்டனர். விமான நிலையத்திற்கு வந்த வாகனங்கள், பயணிகளை வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதித்தனர்.

மேலும் வாகனங்கள் நிறுத்தும் இடம், பயணிகள் வந்துசெல்லும் இடம், விமான ஓடுதளம் உள்ளிட்ட பகுதிகளில் மோப்ப நாய் சோதனை நடைபெற்றது. சோதனை முடிவில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. இருப்பினும், இந்த சோதனையால் விமான போக்குவரத்து ஏதும் பாதிக்கப்படவில்லை.

கடந்த செப்.28ம் தேதி இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது மதுரை விமான நிலையத்திற்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததுள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News