தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மதுரை விஜய் மாநாடு தேதி மாறுகிறது

 

மதுரை: மதுரையில் ஆக. 25ம் தேதி தவெக 2வது மாநில மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாரபத்தி என்னும் இடத்தில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆக. 27ல் விநாயகர் சதுர்த்தி வருகிறது. இதற்கு முன்பாகவே மாநிலம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு எனவே மதுரை மாநாட்டை வேறு தேதியில் மாற்றி நடத்த சாத்தியம் உள்ளதா என போலீசார் தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசாருக்கு விளக்கம் அளிப்பதற்காக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று மதுரை எஸ்பி அலுவலகத்திற்கு நிர்வாகிகளுடன் வந்தார்.

எஸ்பி அரவிந்தனை சந்தித்து மாநாடு தேதி மாற்றம் குறித்து விளக்கமளித்தார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘ஆக. 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி வருவதால், அதற்கு முன்பிருந்தே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டியுள்ளதால் மாநாட்டிற்கு பாதுகாப்பு தருவதில் சிரமம் உள்ளதாக கூறினர். ஆக. 18 முதல் 22ம் தேதிக்குள் வேறொரு தேதியை முடிவு செய்து தருமாறு கேட்டிருந்தனர். அதன்படி ஒரு தேதியை முடிவு செய்து மனுவாக வழங்கியுள்ளோம். இந்த தேதியை தவெக தலைவர் விஜய் விரைவில் அறிவிப்பார்’’ என்றார்.

 

Related News