தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மதுரைவீரன் காலனி பகுதியில் பகல் நேரத்தில் உலாவந்த கரடி

ஊட்டி : நீலகிரி மாவட்டம் வனப்பரப்பு அதிகம் உள்ள மாவட்டமாக விளங்கி வருகிறது. இங்குள்ள வனங்களில் புலி, சிறுத்தை, காட்டுமாடு, கரடி, மான்கள் மற்றும் பல்வேறு வகையான பறவை இனங்கள், அரிய வகை தாவரங்கள் உள்ளன.

மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமப் பகுதிகள் வானத்தை ஒட்டியே அமைந்துள்ளன. இதனால் அவ்வப்போது காட்டுமாடு, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பை ஒட்டிய பகுதிகளில் உலா வருவதை காண முடியும்.

மான், காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவதை காட்டிலும் வளர்ப்பு பிராணிகளான நாய், பூனை, கோழி, ஆடு உள்ளிட்டவற்றை வேட்டையாடுவது சுலபம் என்பதால் சிறுத்தை அடிக்கடி குடியிருப்பு பகுதிகளில் உலாவந்து அவற்றை வேட்டையாடுகின்றன.

இதேபோல் கரடியும் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளில் உலா வருகின்றன. இதனிடையே கடந்த சில மாதங்களாகவே குடியிருப்பு பகுதிகளில் காட்டு மாடு, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகின்றன.

இதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டம் ஊட்டி கப்பச்சி அருகே மதுரைவீரன் காலனி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் பகலில் அங்குள்ள தேயிலை தோட்டத்தில் உலா வந்த கரடி ஒன்று சாலையில் குடியிருப்பு பகுதியை நோக்கி ஒய்யாரமாக நடந்து வந்தது.

இதனை அங்கிருந்த சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். சாலையை கடந்து தேயிலை தோட்டம் வழியாக வனத்திற்குள் சென்று மறைந்தது. இந்த வீடிேயா சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.