தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுரை ஐயர் பங்களா பகுதியில் நடக்கும் ‘குணா குகை’ கண்காட்சியை உடனடியாக நிறுத்த ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: மதுரை ஐயர் பங்களா பகுதியில் நடக்கும் ‘குணா குகை’ கண்காட்சியை உடனடியாக நிறுத்த உயர் நீதிமன்றக் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை ஐயர் பங்களா பகுதியில் ’குணா குகை’ கண்காட்சியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை, உரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என மாநகராட்சி சார்பில், உயர் நீதிமன்றக் கிளையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

கடந்த 7ம் தேதி தொடங்கிய இக்கண்காட்சிக்கு தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தீயணைப்புத்துறையினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு இன்று ஐகோர்ட் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது 15 நிபந்தனைகளில் 10 நிபந்தனைகள் நிறைவேற்றப்படவில்லை என தீயணைப்புத்துறையினர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் இத்தகைய சூழலில் கண்காட்சியை தொடர்ந்து நடத்த அனுமதிப்பது ஆபத்தானது; நிபந்தனைகளை கடைபிடித்த பின்னர் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அனுமதி அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டதுடன் ‘குணா குகை’ கண்காட்சியை உடனடியாக நிறுத்த ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

Advertisement