தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் ராஜினாமாவை ஏற்பதாக மாமன்ற கூட்டத்தில் ஒப்புதல்..!!

மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் ராஜினாமாவை ஏற்பதாக மாமன்ற கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியின் மேயராக இருந்த இந்திராணி இரண்டு தினங்களுக்கு முன்பாக குடும்ப சூழலை காரணம்காட்டி தான் ராஜினாமா செய்வதாக தெரிவித்திருந்தார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாநகராட்சியை பொறுத்தவரை கடந்த சில மாதங்களாகவே முறைகேடு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement

இதில், மாநகராட்சி சார்பாக அவருடைய உறவினர்கள் கைது செய்யப்பட்டு, அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே மேயரின் கணவர் பொன் வசந்த் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்துள்ளார். இந்த சூழ்நிலையில் மேயர் தன்னுடைய குடும்ப சூழலை காரணம் காட்டி தான் ராஜினாமா செய்வதாக நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், முறைப்படி இவரது ராஜினாமா ஏற்பது குறித்த அவரச மாநகராட்சி கூட்டம் இன்று துணை மேயர் நாகராஜன் தலைமையில், மதுரை மாநகராட்சி மன்றத்தில் நடைபெற்றது. இதில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். துணை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் சித்திரா விஜயன் இதில் கலந்து கொண்டு கூட்டத்தை நடத்தினர். கூட்டம் துவங்குவதற்கு முன்பாகவே அதிமுகவினர் மேயர் ராஜினாமாவை தாங்கள் வரவேற்பதாக கூறிய உடன் திமுகவினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனிடையே மன்றத்தில் மேயர் ராஜினாமா ஏற்பது குறித்த தகவல் தீர்மானமாக வைக்கப்பட்டது . இந்த தீர்மானத்தை ஏற்பதாக அனைவரும் தெரிவித்திருப்பதை தொடர்ந்து. மேயரின் ராஜினாமா முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது . இனி அடுத்தகட்டமாக புதிதாக மேயரை தேர்தெடுப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வரும் அதற்கு பின்பாக புதிய மேயரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

 

Advertisement

Related News