தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மதுரையில் வீட்டிற்கு அருகே சிறுவனை கடித்து குதறிய தெருநாய்: ஒரு மணி நேரப்போராட்டத்திற்கு பின் நாயை பிடித்து சுகாதாரத்துறையினர்

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே பள்ளி சிறுவனையும், அவனது தந்தையும் தெருநாய் கடித்து குதறிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அவ்வப்போது சுற்றித்திரிகின்ற தெருநாய்களை பிடிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், அவ்வப்போது தெருநாய்கள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. இந்த அந்த பகுதியில் இருக்க கூடிய பொதுமக்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில், மதுரையில் உள்ள ஒரு பகுதியில் 8 வயது சிறுவன் பள்ளி செல்வதற்காக குளிக்க சென்ற போது, அந்த வீட்டின் காம்பவுண்ட் உள்ளே புகுந்த தெருநாய் ஒன்று, அந்த சிறுவனை கடித்து குதறியது. இதையடுத்து சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தெருநாயை விரட்டிய சிறுவனின் தந்தை முத்துச்சாமியையும் தெருநாய் விரட்டி விரட்டி கடித்து குதறியது. இதையடுத்து வீட்டில் உள்ளவர்கள் மற்றும் அக்கபக்கத்தினர் ஓடி வந்து தெருநாயை விரட்டி அடித்தனர்.

இதையடுத்து காயம்பட்ட இருவரும் மதுரை அரசு ராஜா மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட்டு கொண்டு சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மதுரை மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சுகாதாரத்துறையினர் ஒரு மணி நேரப்போராட்டத்திற் பின் நாயை பிடித்தனர். இதைத்தொடர்ந்து இந்த பகுதி சுற்றித்திரிகின்ற தெருநாய்கள்களை பிடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related News