தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுரையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள், கொடிக்கம்பங்களை ஒரு மணிநேரத்தில் அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு!!

மதுரை: மதுரையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள், கொடிக்கம்பங்களை ஒரு மணிநேரத்தில் அகற்ற உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நாகையைச் சேர்ந்த அருளரசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருத்தார். அந்த மனுவில், தமிழகத்தில் அனுமதி பெறாமல் பல்வேறு இடங்களிலும், சாலையோரங்களிலும், சாலை நடுவிலும் பேனர்கள், பதாகைகள், கொடிக்கம்பங்கள் நடப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், பல்வேறு நேரங்களில் பேனர்கள், கொடிக்கம்பங்கள் சாய்வதால் விபத்து ஏற்படும் நிலை உருவாகிறது. எனவே இவற்றை அகற்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Advertisement

இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், அனுமதியின்றி பேனர்கள், கொடிக்கம்பங்கள் வைப்பது சட்டவிரோதம். எனவே தமிழகத்தில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட பேனர்கள் மற்றும் கொடிக்கம்பங்களை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் வீராகதிரவன், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட பேனர்கள், கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளது. மேலும், அனுமதி இல்லாத இடங்களில் பேனர்கள், கொடிக்கம்பங்கள் வைக்கவும் அனுமதி வழங்கப்படுவது இல்லை. தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று வழக்கறிஞர் தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, மதுரை மாநகரம் முழுவதும் வைக்கப்பட்டுள்ள பேனர்கள், கொடிக்கம்பங்கள், அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டுள்ளதை நாங்கள் பார்த்திருக்கிறோம். அதை ஏன் அகற்றவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதுமட்டுமின்றி மதுரை மாநகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஏராளமான கொடிக் கம்பங்கள், பேனர்கள் உள்ளன. நேரில் ஆய்வு செய்ய நாங்கள் தயார் என நீதிபதிகள் தெரிவித்தனர். அதை தொடர்ந்து மதுரையில் உள்ள அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள், கொடிக்கம்பங்களை ஒரு மணிநேரத்தில் அகற்ற வேண்டும். பேனர்கள் அகற்றப்பட்டுள்ளதா என்பதை கண்காணித்து அறிக்கை அளிக்க மதுரை காவல் ஆணையருக்கு ஒரு மணி நேரம் அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து, இந்த வழக்கு விசாரணை ஒரு மணி நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement