தேவநாதன் யாதவின் அனைத்து சொத்து விபரங்களையும் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
நிதி மோசடி வழக்கில் கைதான தேவநாதன் யாதவின் அனைத்து சொத்து விபரங்களையும் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 6 வார காலம் இடைக்கால ஜாமின் வழங்குமாறு அவர் தரப்பில் வாதம் முன்வைக்க, அது குறித்து வரும் 25ம் தேதி முடிவு செய்யப்படும் என நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைக்கக் கூடும் என்ற காவல்துறையின் வாதத்தை ஏற்க நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.