தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதரசா வாரியத்தை ஒழிக்கும் முடிவு சிறுபான்மையினரின் உரிமைகள் மீதான தாக்குதல்: ஜவாஹிருல்லா கண்டனம்

சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ நேற்று வெளியிட்ட அறிக்கை: உத்தரகாண்ட் மாநிலத்தில் செயல்பட்டு வரும் மதரசா கல்வி வாரியத்தை ஒழித்து, சிறுபான்மையினரால் நடத்தப்படும் அனைத்து நிறுவனங்களையும் மாநில வாரியத்தின் கீழ் கொண்டுவரும் உத்தரகாண்ட் அரசின் முடிவு, அரசியலமைப்பு உத்தரவாதங்களை கடுமையாக மீறுவதாகவும், இந்தியாவின் சிறுபான்மையினரின் கல்வி மற்றும் கலாச்சார உரிமைகள் மீதான நேரடி தாக்குதலாகவும் உள்ளது.

Advertisement

மதரசாக்கள் வரலாற்று ரீதியாக மத மற்றும் தார்மீகக் கல்வியை மட்டுமல்லாமல், சமூகத்தின் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒதுக்கப்பட்ட முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைத்துப் பிரிவினரிடையே நவீனக் கற்றலை வழங்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளன. உண்மையான கல்வி முன்னேற்றத்தை உரையாடல், உள்ளடக்கம் மற்றும் பன்முகத்தன்மையை ஏற்று செயல்படுவதின் மூலம் மட்டுமே அடைய முடியுமே தவிரச் சிறுபான்மை நிறுவனங்களை அகற்றும் கட்டாய நடவடிக்கைகள் மூலம் அடைய இயலாது.

உத்தரகண்ட் அரசு உடனடியாக இந்தப் பிற்போக்குத்தனமான முடிவை திரும்பப் பெறவேண்டும். சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இணைந்துசெயல்பட வேண்டும். இந்தியாவின் பலம் அதன் பன்முகத்தன்மையில் உள்ளது. அந்தப் பன்முகத்தன்மையை அழிக்கும் எந்தவொரு முயற்சியும் நமது ஜனநாயகத்தின் அடித்தளத்தையே பலவீனப்படுத்தும்.

Advertisement