தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாங்கள் பைத்தியமா? கட்சியை கலைத்து விடுவேன்: சீமான் திடீர் பரபரப்பு

திருக்காட்டுப்பள்ளி: ‘நாங்கள் பைத்தியமா? நாம் தமிழர் கட்சியை கலைந்து விடுவேன்’ என்று சீமான் பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் பூதலூரில் நாம் தமிழர் கட்சியின் தண்ணீர் மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. அதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: நாங்கள் முன்னெடுக்கும் நிகழ்வுகளை பைத்தியம் என்பது போல, இங்குள்ள பல பைத்தியங்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.

Advertisement

நாங்கள் பைத்தியங்கள் அல்ல. பைத்தியங்களாக உள்ளவர்களுக்கு வைத்தியம் பார்க்க வந்த வைத்தியர்கள். சீமான் மரத்துடன் பேசுகிறார். அதற்கு என்ன ஓட்டு இருக்கிறதா என்கிறார்கள். மரத்திற்கு ஓட்டு அல்ல, உயிர் இருக்கிறது. தண்ணீரிடம் வாக்கு இல்லை. வாழ்க்கை இருக்கிறது என்பதற்காக தான் தண்ணீருக்கு மாநாடு. யாரும் எங்களுக்கு போட்டி அல்ல. நாம் தமிழர் எடுத்து வைக்கும் அரசியலின் அருகே வர இங்குள்ளவர்களுக்கு அரை நுாற்றாண்டு ஆகும்.

எங்கள் அரசியல் வேறு, உங்கள் அரசியல் வேறு. மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காக வரும். ஐரோப்பிய நாடுகளில் தண்ணீரை யார் அதிகமாக வைத்து உள்ளார்களோ அந்த நாடுகள்தான் பணக்கார நாடுகள் என்கிறார்கள். ஐரோப்பிய நாடுகள் நீர் பொருளாரத்திற்கு வந்து விட்டன. நாம் தமிழர் ஆட்சிக்கு வந்ததால், தண்ணீர் விற்பனைக்கு தடை. நான் எடுத்துள்ள கருத்தியலில் வென்றால், கட்சியை கலைத்து விடுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement