தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மடிப்பாக்கத்தில் எலக்ட்ரானிக் கடையில் தீ: ரூ.1 லட்சம் பொருள் நாசம்

ஆலந்தூர்: சென்னை மடிப்பாக்கம், ராம் நகர் தெற்கு, 5வது குறுக்கு தெருவில் உள்ள பழைய எலெக்ட்ரானிக் பொருட்களை பழுதுபார்த்து விற்பனை செய்யும் கடையில் இன்று காலை தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக கடை உரிமையாளரிடம் அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். இதற்குள் கடை முழுவதிலும் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்ததில், அப்பகுதி முழுவதிலும் கரும்புகை சூழ்ந்தது. அப்பகுதி மக்கள் கடும் மூச்சுத் திணறல் மற்றும் கண் எரிச்சலால் பெரிதும் அவதிப்பட்டனர்.

Advertisement

இதுகுறித்து தகவலறிந்ததும் மடிப்பாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார் தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர், அந்த பழைய எலக்ட்ரானிக் பொருள் விற்பனை கடையில் எரிந்து கொண்டிருந்த தீயை சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் போராடி வீரர்கள் அணைத்தனர். இவ்விபத்தில், கடையில் இருந்த சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமாகிவிட்டன.

இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், அந்த எலக்ட்ரானிக் கடை மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததாகத் தெரியவந்தது. இதுபற்றி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Advertisement