மதுராந்தகத்தில் இன்று கனமழை: புளியமரம் விழுந்து வீட்டின் மேற்கூரை சேதம்
Advertisement
இதுகுறித்து தகவலறிந்ததும் மதுராந்தகம் நகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்தனர். அங்கு மகேந்திரனின் வீட்டு மேற்கூரைமீது முறிந்து விழுந்த புளியமரத்தை அறுவை இயந்திரத்தின் மூலமாக நகராட்சி ஊழியர்கள் முழுவதுமாக வெட்டி அகற்றினர். இதேபோல் அப்பகுதி நெடுஞ்சாலை ஓரத்தில் ஒரு புளியமரம், 3 பனைமரங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. இதன் அருகிலேயே மின்மாற்றி இயங்கி வருகிறது. இதன்மீது அந்த மரங்கள் முறிந்து விழுவதற்கு, அவற்றை பாதுகாப்பாக வெட்டி அகற்ற வேண்டும். மகேந்திரனின் வீட்டை அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
Advertisement