தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுராந்தகத்தில் இன்று கனமழை: புளியமரம் விழுந்து வீட்டின் மேற்கூரை சேதம்

Advertisement

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் உள்பட பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மதுராந்தகம் அருகே மாம்பாக்கம் பகுதியில் நெடுஞ்சாலையோரத்தில் இருந்த ராட்சத புளியமரம், அருகில் உள்ள மகேந்திரன் என்பவரின் வீட்டின்மீது இன்று காலை திடீரென முறிந்து விழுந்தது. இதில் அந்த வீட்டின் மேற்கூரை மற்றும் சுற்றுச்சுவர் பலத்த சேதமடைந்தது. மேலும், சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தின்மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்ததில், அந்த மின்கம்பம் உடைந்து நொறுங்கியது.

இதுகுறித்து தகவலறிந்ததும் மதுராந்தகம் நகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்தனர். அங்கு மகேந்திரனின் வீட்டு மேற்கூரைமீது முறிந்து விழுந்த புளியமரத்தை அறுவை இயந்திரத்தின் மூலமாக நகராட்சி ஊழியர்கள் முழுவதுமாக வெட்டி அகற்றினர். இதேபோல் அப்பகுதி நெடுஞ்சாலை ஓரத்தில் ஒரு புளியமரம், 3 பனைமரங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. இதன் அருகிலேயே மின்மாற்றி இயங்கி வருகிறது. இதன்மீது அந்த மரங்கள் முறிந்து விழுவதற்கு, அவற்றை பாதுகாப்பாக வெட்டி அகற்ற வேண்டும். மகேந்திரனின் வீட்டை அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement

Related News