தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.162 கோடியில் சீரமைக்கப்பட்டு வரும் மதுராந்தகம் ஏரியை எம்எல்ஏ ஆய்வு

மதுராந்தகம்: பெஞ்சல் எதிரொலியாக மதுராந்தகம் ஏரியை க.சுந்தர் எம்எல்ஏ ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டத்தின் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி ரூ.162 கோடி மதிப்பீட்டில் உபரி நீர் போக்கி நீர்ப்பாசன மதகு முன் கரை அமைத்தல், ஏரி தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் இரவு பகலாக நடைபெற்று 75 சதவீத கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், பெஞ்சல் புயல் செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் காற்றுடன் கனமழை கொட்டியது.
Advertisement

இதனால் இந்த மாவட்டங்களில் இருந்து கிளியாற்றின் வழியாகவும் ஓடைகள் வழியாகவும் வாய்க்கால் வரப்புகள் வழியாகவும் மதுராந்தகம் ஏரிக்கு பெரும் வெள்ளத்துடன் தண்ணீர் வரை சென்று கொண்டிருக்கிறது. இதனால், மதுராந்தகம் ஏரி நேற்றுமுன்தினம் விரைவாக நிரம்பியது. தற்பொழுது இந்த ஏரியை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் உபரி நீர் போக்கி வழியாக 8 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது.

இதனால், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ நேற்று மதுராந்தகம் ஏரியை ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார். மேலும், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் நீள் முடியான், இளநிலை பொறியாளர் பாரத் ஆகியோர் ஏரியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் குறித்து விளக்கமளித்தனர். இந்த ஆய்வின்போது மதுராந்தகம் நகர செயலாளர் குமார் உள்ளிட்ட விவசாயிகள், அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Advertisement