தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுராந்தகம்-சூனாம்பேடு நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்படுமா?: நாளுக்குநாள் விபத்துகள் அதிகரிப்பு

செய்யூர்: நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து வருவதால் மதுராந்தகம்-சூனாம்பேடு நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுராந்தகத்தில் இருந்து சூனாம்பேடு செல்லும் நெடுஞ்சாலை சுமார் 28 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது. இந்த நெடுஞ்சாலை வழியாக தினமும் அரசு, தனியார் பேருந்துகள் மற்றும் இரு சக்கரம், கனரக வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், பகலும் இரவும் எந்நேரமும் நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிகரித்து காணப்படும். இந்த நெடுஞ்சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இருவழிச்சாலையாக அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலையோரங்களில் ஆங்காங்கே சேதமடைந்து குறுகி விட்டதால் வாகனங்கள் எதிர்எதிரே கடக்கும் போது விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

Advertisement

குறிப்பாக, சித்தாமூர் அடுத்த முதுகரையில் இருந்து மதுராந்தகம் வரையிலான 5 கிலோமீட்டர் சாலை மிகவும் குறுகி உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் இந்த சாலையில் பயணித்து வருகின்றனர். இந்த சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் பெரும்பாலான விபத்துகள் இரவு நேரங்களில் நிகழ்ந்து வருகிறது. சித்தாமூரில் இருந்து செய்யூர் வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட்டதை போல் மதுராந்தகம்-சூனாம்பேடு சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் உயிர் பாதுகாப்பு கருதி மதுராந்தகம்-சூனாம்பேடு நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்து சாலைகளில் மின் விளக்குகள் அமைத்து தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

Related News