தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாதவரத்தில் வீட்டில் பதுக்கிவைத்திருந்த ரூ.20 கோடி மெத்தம்பெட்டமைன் பறிமுதல்: பெண் உள்பட 6 பேரிடம் விசாரணை

Advertisement

திருவொற்றியூர்: மாதவரம் பகுதியில் வீட்டில் பதுக்கிவைத்திருந்த 20 கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் போதை பொருட்களை பறிமுதல் செய்து பெண் உள்பட 6 பேரிடம் விசாரணை நடத்துகின்றனர். சென்னை மாதவரம் ரோஜா நகரில் போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக சென்னை மாநகர காவல் ஆணையருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து புதியதாக தொடங்கப்பட்டுள்ள ஏ.என்.ஐ.யூ பிரிவு போலீசார் உடனடியாக மாதவரம் காவல் சரக காவல் அதிகாரிகளுடன் இணைந்து கடந்த 22ம்தேதி மாதவரம் ரோஜா நகரில் சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த போதை பொருட்கள் வியாபாரி வெங்கடேசன் (41), அவரது கூட்டாளி திருவல்லிக்கேணி பார்டர் தோட்டத்தை சேர்ந்த கார்த்திக் (36) ஆகியோரை கைது செய்து 1.5 கிலோ கிராம் மெத்த பெட்டமைனை பறிமுதல் செய்தனர். இதன்பின்னர் 2 பேரையும் சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து வெங்கடேசனுக்கு பின்னால் உள்ள போதை பொருட்கள் கடத்தல் கும்பலை முழுவதுமாக பிடிக்க காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டது. இதையடுத்து சிறையில் உள்ள வெங்கடேசன் மற்றும் அவரது கூட்டாளி கார்த்திக் ஆகியோரை நேற்று கஸ்டடியில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், வெங்கடேசனின் செல்போனில் தொடர்புகொண்டவர்களை வைத்து விசாரணை நடத்தியதில், இவருடன் தமிழகம் மட்டுமின்றி டெல்லி, மும்பை உள்பட பல பகுதிகளில் இருந்து போதைபொருள் கடத்தல் கும்பல் தொடர்புகொண்டு பேசியது தெரிந்தது.

இதையடுத்து கூடுதல் காவல் ஆணையாளர் நரேந்திரநாயர் உத்தரவின்படி, கொளத்தூர் துணைஆணையாளர் பாண்டியராஜன், புழல் சரக உதவி ஆணையர் சகாதேவன், இன்ஸ்பெக்டர் பூபாலன் ஆகியோர் வெங்கடேசன், கார்த்திக் ஆகியோர் கொடுத்த தகவல்படி, வெங்கடேசனின் மனைவி ஜான்சி உள்பட 6 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் கொடுத்த தகவல்படி, வீட்டில் பதுக்கிவைத்திருந்த சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான 16 கிலோ மெத்தம்பெட்டமின் போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். வழக்கில் தொடர்புடைய மேலும் 5 பேரை பிடிக்க டெல்லி மற்றும் தமிழகத்தில் தென் மாவட்டங்களுக்கு போலீசார் விரைந்துள்ளனர்.

Advertisement