தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாதவரத்தில் பூட்டிக் கிடந்த இரும்பு தொழிற்சாலையில் பெயின்டர் படுகொலை: மர்ம கும்பலுக்கு வலை

திருவொற்றியூர்: மாதவரத்தில் பூட்டிக் கிடந்த இரும்பு தொழிற்சாலையில் பெயின்டரை படுகொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மாதவரம் அம்பேத்கர் நகர் அருகே தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், இந்த தொழிற்சாலை கடன் பிரச்னை தொடர்பாக மூடப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை இந்த தொழிற்சாலையின் உள்ளே இருந்து வாலிபர் ஒருவர் அலறும் சத்தம் கேட்டது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் மாதவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பூபாலன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தொழிற்சாலை சுவ்ர ஓட்டை வழியாக உள்ளே சென்று பார்த்தபோது வாலிபர் ஒருவர் பலத்த வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார்.

Advertisement

முதற்கட்ட விசாரணையில், இறந்த நபர் பர்மா காலனியை சேர்ந்த பெயின்டர் சந்துரு (எ) லோகேஷ் (24) என தெரியவந்தது. சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாலிபர்களிடையே ஏற்பட்ட தகராறில் கொலை சம்பவம் நிகழ்ந்திருக்கலாம், என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், புழல் உதவி ஆணையர் சத்யன் தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பவ இடத்தைச் சுற்றிலும் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவான வீடியோ காட்சிகளின் அடிப்படையில் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். கொலையாளிகள் பிடிபட்டால் தான் கொலைக்கான காரணம் தெரியவரும், என்று போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Related News