தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாதவரம் ஆந்திரா பேருந்து நிலையத்தில் கஞ்சா பார்சலுடன் வாலிபர் கைது: 19 கிலோ பறிமுதல்

புழல்: சென்னை மாதவரம், 100 அடி சாலை ரவுண்டானா அருகே உள்ள ஆந்திர பேருந்து நிலையத்தில் ஒரு வாலிபர் சந்தேக நிலையில் 2 கைப்பையுடன் நின்றிருப்பதாக நேற்று மாதவரம் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு சிறப்பு எஸ்.ஐ ராஜேஷ், தலைமை காவலர்கள் ராஜசேகர், மோசஸ், சார்லஸ், தமிழ்தென்றல், ஹரி ஆகியோர் தீவிர கண்காணிப்பு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திர பேருந்திலிருந்து கீழே இறங்கி வந்த 17 வயது சிறுவன், அங்கு நின்றிருந்த வாலிபரிடம் 2 கைப்பைகளை கொடுத்துள்ளார்.

Advertisement

பின்னர் 2 கைப்பைகளுடன் நின்றிருந்த வாலிபர் மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். இதில், அந்த கைப்பைகளில் 19 கிலோ எடையிலான கஞ்சா பார்சல்கள் கடத்தி வரப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, இருவரையும் மாதவரம் மதுவிலக்கு பிரிவு காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், பிடிபட்ட நபர் சென்னை நந்தனம், சிஐடி நகரை சேர்ந்த சந்தோஷ் (25) எனத் தெரியவந்தது.

மேலும், ஒடிசாவில் இருந்து ஆந்திரா வழியாக ஆந்திர பேருந்து மூலம் சென்னைக்கு வந்திறங்கிய 17 வயது சிறுவன், அங்கு நின்றிருந்த சந்தோஷிடம் கஞ்சா பார்சல் அடங்கிய கைப்பைகளை கொடுத்துள்ளார். இதை சந்தோஷ் பெற்ற, சென்னை மற்றும் புறநகர் பகுதி கஞ்சா வியாபாரிகளிடம் கொடுத்து, அவற்றை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சில்லறை விற்பனை செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார் என்ற விவரங்கள் தெரியவந்தன. இதுகுறித்து மாதவரம் மதுவிலக்கு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 19 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் நேற்று மாலை இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 17 வயது சிறுவனை செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும், சந்தோஷை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

Advertisement

Related News