மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரிய சிபிஐ
மதுரை : மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரிய சிபிஐ. உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வர, மத்திய தடய அறிவியல் ஆய்வக அறிக்கை கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐ தரப்பில் கூடுதல் காலம் கோரப்பட்டது. டெல்லியில் உள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகம், 3 வாரங்களில் ஆய்வு அறிக்கையை வழங்க ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Advertisement
Advertisement