மபி அரசு பள்ளிகளில் ஊழல் 1 சுவரில் 4 லிட்டர் பெயிண்ட் அடிக்க 233 ஊழியர்கள்: 10 ஜன்னல், 4 கதவுகள் அமைக்க 275 ஊழியர், 150 கொத்தனார்
Advertisement
இந்த இரண்டு பள்ளிகளிலும் நடந்த வேலைக்கான பில் தொகை நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த பணியை அங்குள்ள சுதாகர் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் மேற்கொண்டு கடந்த மே 5ஆம் தேதி பில் வழங்கி உள்ளது. இதற்கு நிபானியா பள்ளி முதல்வர் ஒப்புதல் வழங்கி உள்ளார். இந்த பில் இணையதளத்தில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மெகா ஊழல் குறித்து மாவட்ட கல்வி அதிகாரி பூல் சிங் மார்பாச்சி கூறுகையில்,’இந்த இரண்டு பள்ளிகளில் நடந்த சீரமைப்பு பணி தொடர்பான பில்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. அவை விசாரிக்கப்பட்டு வருகின்றன. வெளிவரும் உண்மைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்’என்றார்.
Advertisement