தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய பணத்தை 30% வட்டியுடன் திருப்பி தருமாறு நடிகர் விஷாலுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு இடைக்கால தடை..!!

சென்னை: லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய பணத்தை 30% வட்டியுடன் திருப்பி தருமாறு நடிகர் விஷாலுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்பு செல்வனிடம் கோபுரம் நிறுவனத்திடம் இருந்து ரூ.21 கோடியே 29 லட்சம் கடன் பெற்றிருந்தார். இந்த தொகையை முழுவதும் ஏற்றுக்கொண்டு லைகா நிறுவனம் அந்த தொகையை திருப்பி செலுத்தியது. இதை அடுத்து இந்த தொகையை முழுவதும் திருப்பி தரும் வரைக்கும் விஷால் பட நிறுவனத்தின் அனைத்து பட உரிமைகளும் லைகா நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என ஒப்பந்தமும் செய்யப்பட்டது.

Advertisement

ஆனால் இந்த ஒப்பந்தத்தை மீறி படங்களை வெளியிட்டதாக கூறி பணத்தை திருப்பி தர வேண்டும் என்று விஷாலுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் லைகா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி லைகா நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய ரூ.21 கோடியே 29 லட்சத்தை 30 சதவீத வட்டியுடன் திருப்பி தர வேண்டும் என்று விஷால் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து விஷால் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம் மற்றும் முகமது சித்திக் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

பணம் கொடுக்கல் வாங்கல் வழக்கு என்பதால் ஒரு குறிப்பிட்ட தொகை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யலாமே என்று விஷால் தரப்பிற்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த விஷால் தரப்பு வழக்கறிஞர் ரூ.15 கோடி கடன் வாங்கியுள்ள சூழலில் ஆண்டுக்கு 30 சதவீத வட்டி என உயர்நீதிமன்ற உத்தரவு சட்டவிரோதம் என அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் வட்டி தொகை மட்டுமே 40 கோடி வருவதாக அவர் குறிப்பிட்டார். லைகா நிறுவனம் கூறியது போல் விஷால் பெரும் பணக்காரர் அல்ல என்றும் அவர் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் அப்படியானால் அவர் திவால் ஆனவர் என அறிவிக்க தயாரா என விஷால் தரப்பிற்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் 30 சதவீத வட்டி என்பது மிகவும் அதிகம் இது சுரண்டப்படுவது . இது போன்ற சுரண்டலை அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர் லைகா நிறுவனத்திடம் பெற்ற கடன் தொகையை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள் ரூ.10 கோடியை டெபாசிட் செய்யும்படி விஷால் தரப்பிற்கு உத்தரவிட்டனர். மேலும் விஸஹ்லின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்கும்படி லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

 

Advertisement

Related News