தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சொகுசு பேருந்துக்கு கூண்டு கட்டும் பணி அமைச்சர் சிவசங்கர் பெங்களூருவில் ஆய்வு: தமிழக அரசு தகவல்

சென்னை: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சொகுசு பேருந்துகளுக்கு கூண்டு கட்டும் பணி, உள்கட்டமைப்பு வசதியை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று பெங்களூருவில் ஆய்வு செய்தார். தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு நடப்பு நிதி ஆண்டு 2025-26ல், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு 130 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்துள்ளது. அவற்றில் 110 குளிர் சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளும், 20 மல்டி ஆக்சில் சொகுசு பேருந்துகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த 20 பேருந்துகளை கொள்முதல் செய்வதற்காக திறந்தவெளி ஒப்பந்தம் மூலம் தேர்வு செய்யப்பட்ட பெங்களூருவில் அமைந்துள்ள வால்வோ நிறுவனத்தில், கூண்டு கட்டும் பணியையும், உள் கட்டமைப்பு வசதிகளையும், போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சொகுசு பேருந்தை இயக்குவதற்காக பயிற்சி பெற்று வரும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது நிறுவனத்தின் பயிற்சி ஓடுதளத்தில் பேருந்தை சோதனை முறையில் இயக்கி பார்த்தனர். இந்நிகழ்வின்போது, போக்குவரத்துத்துறை செயலாளர் சுஞ்சோங்கம் ஜாதக் சிரு, அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் மற்றும் வால்வோ நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisement