தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆம்பூர் அருகே இன்று அதிகாலை சொகுசு பஸ் கவிழ்ந்து 15 பயணிகள் படுகாயம்

 

ஆம்பூர்: ஆம்பூர் அருகே இன்று அதிகாலை சொகுசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 15 பயணிகள் காயமடைந்தனர். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து கோவைக்கு நேற்றிரவு ஒரு தனியார் சொகுசு பஸ் பயணிகளுடன் சென்றது. இந்த பஸ் இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், அப்பகுதியில் மேம்பால கட்டுமான பணிக்காக கொட்டி வைத்துள்ள மண் குவியல் மீது மோதி சாலையின் குறுக்கே கவிழ்ந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பஸ்சில் இருந்தவர்கள் அலறினர். இந்த சத்தம் கேட்ட அப்பகுதியினர் அங்கு ஓடி வந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மேலும் இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார், நெடுஞ்சாலை ரோந்து பணியினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பஸ்சில் படுகாயமடைந்த 15 பயணிகளை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கிரேன் உதவியால் சாலையின் குறுக்கே கவிழ்ந்து கிடந்த சொகுசு பஸ்சை மீட்டனர். இந்த விபத்து காரணமாக சுமார் 2 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 3 கி.மீ தூரம் வாகனங்கள் வரிசையில் நின்றது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.