தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அன்பு கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பிக்கலாம்: சென்னை ஆட்சியர் தகவல்

சென்னை: “அன்பு கரங்கள்“ நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அன்புக்கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களில், தங்களது பெற்றோரை இழந்து, உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகளை அரவணைத்து பாதுகாக்கும் வகையில் அவர்களின் பள்ளிப்படிப்பு வரை இடை நிற்றலின்றி அவர்கள் கல்வியைத்தொடர, 18 வயது வரை மாதம் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை வழங்குவதோடு, பள்ளிப்படிப்பு முடித்தவுடன் கல்லூரிப்படிப்பு மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

Advertisement

இதன்படி இத்திட்டதின்படி கீழ், ஆதரவற்ற குழந்தைகள், பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள்/ பெற்றோர் இருவரால் கைவிடப்பட்டவர்கள், கைவிடப்பட்ட குழந்தைகள், பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் குழந்தையை கைவிட்டுச் சென்று இருப்பின், ஆதரவு தேவைப்படும் குழந்தைகள், பெற்றோரில் ஒருவர் இறந்து/பெற்றோர் ஒருவரால் கைவிடப்பட்டு, மற்றொரு பெற்றோர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டவராக இருந்தால், பெற்றோரில் ஒருவர் இறந்து பெற்றோர் ஒருவரால் கைவிடப்பட்டு, மற்றொரு பெற்றோர் சிறையில் இருந்தால், பெற்றோரில் ஒருவர் இறந்து/பெற்றோர் ஒருவரால் கைவிடப்பட்டு, மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வந்தால்,

தகுதியுடைய குழந்தைகளின் உறவினர்கள் குடும்ப அட்டையின் நகல், குழந்தையின் ஆதார் நகல், குழந்தையின் பிறப்பு சான்றிதழ், கல்வி மாற்று சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ், குழந்தையின் வாங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல், ஆகியவற்றுடன், அவரவர் பகுதிகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்- சென்னை தெற்கு, எண்:1, புது தெரு, பெருநகர சென்னை மாநகராட்சி வணிக வளாகம், முதல் தளம் (RTO – அலுவலகம் எதிரில்), ஆலந்தூர், சென்னை – 600016, என்பவரிடம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News