தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காதல் கைகூடாததால் திருமணம் செய்யவில்லை காதலன் இறந்த அதே நாளில் நடிகை மரணம்: பாலிவுட்டில் சோகம்

 

Advertisement

மும்பை: புகழ்பெற்ற பாலிவுட் நடிகையும், பின்னணிப் பாடகியுமான சுலக்ஷனா பண்டிட், மாரடைப்பால் நேற்று காலமானார். இசையும், கலையும் நிறைந்த புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்த பாலிவுட் நடிகை சுலக்ஷனா பண்டிட் (71), கடந்த 1970 மற்றும் 1980ம் ஆண்டுகளில் இந்தி திரையுலகில் நடிகையாகவும், பின்னணிப் பாடகியாகவும் ஒரே நேரத்தில் வெற்றி கண்ட அபூர்வ திறமைசாலியாக விளங்கினார்.

‘உல்ஜன்’, ‘ஹீரா பேரி’, ‘அப்னாபன்’ போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். 1975ல் வெளியான ‘சங்கல்ப்’ திரைப்படத்தில் இவர் பாடிய ‘து ஹி சாகர் ஹே து ஹி கினாரா’ என்ற பாடல், இவருக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுத் தந்தது. இவர், நடிகர் சஞ்சீவ் குமாரை தீவிரமாகக் காதலித்தார். ஆனால், சஞ்சீவ் குமார் இவரது திருமண விருப்பத்தை நிராகரித்ததால், திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்ந்து வந்தார். இந்நிலையில், மும்பையில் வசித்து வந்த சுலக்ஷனா பண்டிட், நேற்று மாரடைப்பால் திடீரென காலமானார். இந்தத் தகவலை அவரது சகோதரரும், இசையமைப்பாளருமான லலித் பண்டிட் உறுதிப்படுத்தியுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இடுப்பு எலும்பு முறிவு காரணமாக பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட அவர், அதன்பிறகு உடல்நலம் குன்றியிருந்தார். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நவம்பர் 6ம் தேதிதான் நடிகர் சஞ்சீவ் குமார் உயிரிழந்தார். தற்போது, அவரது 40வது நினைவு நாளிலேயே சுலக்ஷனா பண்டிட்டின் உயிரும் பிரிந்திருப்பது, பாலிவுட் வட்டாரத்தில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது இறுதிச் சடங்கு இன்று மும்பையில் நடைபெற உள்ளது.

 

Advertisement

Related News