தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமணமான ஒரு மாதத்திற்குள் சோகம்; காதல் மனைவி தற்கொலை: கணவர் தூக்கு போட்டு சாவு: 6 ஆண்டு காதல், ‘சிக்கனால்’ சிக்கலானது

 

Advertisement

திருமலை: காதல் திருமணம் முடித்த புதுப்பெண் சிக்கன் குழம்பு சாப்பிட்டதால் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்துகொண்டார். இதனால் மனவேதனை அடைந்த அவரது கணவரும் தூக்கு போட்டு இறந்தார். தெலங்கானா மாநிலம் ஜகத்தியால் மாவட்டம் எர்டாண்டி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் கங்கோத்ரி(22). அதே கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (27). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த செப்டம்பர் 26ம்தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணமான ஒரு வாரத்தில் தசரா பண்டிகை கொண்டாட, கங்கோத்ரி தனது கணவர் சந்தோசுடன் தனது தாய் வீட்டுக்கு சென்றார்.

அங்கு கங்கோத்ரி தனது பெற்றோருடன் சிக்கன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதற்கு ​​அவரது கணவர் சந்தோஷ் ‘நமது வீட்டில் மட்டன் வாங்கி வந்து வைத்து விட்டு, இங்கு சிக்கன் சாப்பிடுகிறாயே’ என்று கேட்டுள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் கங்கோத்ரி தனது கணவருடன் மாமியார் வீட்டிற்கு திரும்பினார். கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக மனவேதனையில் இருந்த கங்கோத்ரி மறுநாள் காலை, வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதனால் சந்தோஷ் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார்.

அதன்பிறகு வீட்டில் உள்ளவர்களிடம் சரிவர பேசாமல் இருந்துள்ளார். நண்பர்களிடம் 6 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்தோம். ஆனால் சிறு பிரச்னைக்காக எனது மனைவி என்னை விட்டு இறந்துவிட்டாளே என மனவேதனையை தெரிவித்துள்ளார். அவர்கள் ஆறுதல் கூறியுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினமும் மனைவி இறந்த வேதனையில் இருந்துள்ளார். இதனால் அவரது பெற்றோர் மனமாற்றம் ஏற்படும் எனக்கருதி அடிலாபாத்தில் உள்ள சகோதரி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்படி அங்கு சென்ற சந்தோஷ், அவர்களிடம் சிறிது நேரம் பேசியுள்ளார். பின்னர் அன்றிரவு அனைவரும் தூங்கிய நிலையில் ஒரு அறையில் தனியாக இருந்த சந்தோஷ், சகோதரி வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News