தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

லாரியில் ரகசிய அறை அமைத்து கடத்திய ரூ.2 கோடி கஞ்சா பறிமுதல்: டிரைவர் உள்பட 2 பேர் கைது

சென்னை: ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு லாரியில் ரகசிய அறை அமைத்து, ரூ.2 கோடி மதிப்புள்ள 320 கிலோ கஞ்சா கடத்தி வந்த ஓட்டுநர் உள்பட 2 பேரை தேசிய போதை பொருள் கட்டுப்பாட்டு பணியக பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு அதிகளவில் கஞ்சா கடத்தி வருவதாக சென்னை மண்டல தேசிய போதை பொருள் கட்டுப்பாட்டு பணியகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Advertisement

அதன்பேரில், செங்குன்றம் நல்லூர் அருகே உள்ள காரனோடை சுங்கச்சாவடியில் தேசிய போதை பொருள் கட்டுப்பாட்டு பணியக அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த லாரி ஒன்றை மறித்து சோதனை செய்த போது, லாரியின் பாடியில் வழக்கத்திற்கு மாறாக ஒரு அடி உயரத்திற்கு பாடி கட்டமைப்பு இருந்தது. இதனால், அதிகாரிகள் லாரியின் பாடியை ஆய்வு செய்த போது, அதில் ரகசிய அறை ஏற்படுத்தி, அதில் 150 பொட்டலங்களாக 320 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

உடனே லாரி ஓட்டுநர் உள்பட 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், கஞ்சா கடத்துவதற்காக லாரியில் பிரத்யேகமாக ரகசிய அறை ஏற்பாடு செய்து, கஞ்சா கடத்துவதற்காக லாரியின் பதிவு எண் மற்றும் பாஸ்ட் டேக் போலியாக தயாரித்து தமிழகத்தில் இருந்து ஆந்திரா சென்று அங்கிருந்து கஞ்சா கடத்தியதும், கடத்தலில் பெரிய கஞ்சா கும்பலுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட 320 கிலோ கஞ்சாவின் மதிப்பு ரூ.2 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி மற்றும் கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த இருவரை கைது செய்து, இதில் தொடர்புடை நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News