தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தென்காசியில் அரசு வக்கீலை கொன்ற லாரி உரிமையாளர் ரயிலில் பாய்ந்து தற்கொலை

தென்காசி: செங்கோட்டை நீதிமன்ற அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி கடந்த 3ம் தேதி தென்காசி கூலக்கடை பஜாரில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்கறிஞரின் சொந்த ஊரான ஊர் மேலழகியானைச் சேர்ந்த லாரி உரிமையாளரான சிவசுப்பிரமணியன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவரது மனைவி ராஜேஸ்வரி, மைத்துனர் சதீஷ் ஆகியோரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சிவசுப்பிரமணியனை தனிப்படை போலீசார் கேரளா உள்ளிட்ட பல பகுதியில் தொடர்ந்து 8 நாட்களாக தேடி வந்தனர்.

Advertisement

இந்நிலையில் நாமக்கல் அருகே ரயிலில் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் தென்காசி போலீசாரால் தேடப்பட்டு வந்த சிவசுப்பிரமணியனின் உருவத்துடன் ஒத்துப்போவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் தென்காசி இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின் நேற்று முன்தினம் சிவசுப்பிரமணியன் உறவினர்களை அழைத்துச் சென்று உடலை பார்வையிட்டார். இதில் இறந்தது சிவசுப்பிரமணியன் தான் என்பதும், இதுதொடர்பாக சேலம் ரயில்வே போலீசார் கடந்த 4ம் தேதியே வழக்குப்பதிவு செய்துள்ளதும் தெரியவந்தது. அதாவது கடந்த 3ம் தேதி வழக்கறிஞர் முத்துக்குமாரசாமியை கொலை செய்த மறுநாளே சிவசுப்பிரமணியன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Advertisement