தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

முருகப்பெருமானுக்கு உகந்த ஆடிக் கிருத்திகை திருநாள்: பலவகை காவடிகளுடன் நீண்ட நேரம் காத்திருந்து கந்தனை தரிசிக்கும் பக்தர்கள்

திருவள்ளூர்: ஆடிக் கிருத்திகையையொட்டி முகப்பெருமானின் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. முருகப்பெருமானை தரிசிக்க பல்வேறு காவடிகளை சுமந்தவாறு பக்தர்கள் கூட்டம் கூட்டமாக சென்றனர். முருகப்பெருமானுக்கு உகந்த ஆடிக் கிருத்திகையையொட்டி, திருத்தணி முருகனை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் மலை கோயிலில் குவிந்தனர். பல்வேறு வகையான காவடிகளை சுமந்து வந்த பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து முருகனை தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 560 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரக்கோணம் - திருத்தணி இடையே 3 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன.

பழனி முருகன் கோயிலுக்கு மலர், மயில் என பல்வேறு வகையான காவடிகளை சுமந்து கொண்டு பக்தர்கள் வந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த மலை கோயிலுக்கு செல்லக்கூடிய பாதை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டது. பக்தர்கள் யானை பாதை வழியாக மலை கோயிலுக்கு செல்லவும், சாமி தரிசனம் முடித்த பக்தர்கள் படி பாதை வழியாக கீழே இறங்கி செல்லவும் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்தது. திருவண்ணாமலையில் ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த வட வீதி முருகன் கோயிலுக்கு 1008 காவடிகள், 501 பால் குடங்கள் ஏந்தி பக்தர்கள் மாடவீதியில் நடமாடியப்படி அரோகரா முழக்கத்துடன் ஊர்வலமாக சென்றனர்.