தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மக்களவை சபாநாயகர் பதவிக்கு தெலுங்கு தேசமும், ஐ.ஜ.தளமும் பாஜகவை நிர்பந்திப்பதாக தகவல்

டெல்லி: மக்களவை சபாநாயகர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. மக்களவை சபாநாயகர் பதவியை தங்களுக்கு தர தெலுங்கு தேசமும், ஐ.ஜ.தளமும் பாஜகவை நிர்பந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்குதேசமும், ஐக்கிய ஜனதா தளமும் ஆதரவு அளித்தால் மட்டுமே பாஜகவால் ஆட்சி அமைக்க முடியும். எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாததால் சபாநாயகர் பதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
Advertisement

மக்களவைத் தோ்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதே நேரத்தில் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஜக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கண்டிப்பாக தேவை என்ற நிலை உருவாகியுள்ளது. 2 முறை பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்தில் இருந்த பாஜக சபாநாயகர் பதவியை விட்டுத்தருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதிமுக்கியத்துவம் வாய்ந்த சபாநாயகர் பதவியை இருகட்சிகளும் கேட்பதால் பாஜகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது டிடிபி பாலயோகிக்கு சபாநாயகர் பதவி அளிக்கப்பட்டதை சந்திரபாபு நாயுடு சுட்டிக் காட்டியுள்ளார். தெலுங்குதேசம் 16 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஆட்சியை தக்க வைக்க ஆதரவு கட்சிகளுக்கு துணை பிரதமர் பதவியை அளிக்க பாஜக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர். டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் டிடிபி, ஐ.ஜ.தளம் நிபந்தனைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுளளது.

Advertisement