தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மக்களவைத் தேர்தலில் படுதோல்வி பினராயி விஜயனுக்கு கட்சிக்குள் எதிர்ப்பு வலுக்கிறது

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. சில தொகுதிகளில் இடதுசாரி கூட்டணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக கருதப்படும் பல பகுதிகளில் கூட காங்கிரசுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்தன. முதல்வர் பினராயி விஜயனின் சொந்தத் தொகுதியான தர்மடத்தில் கூட காங்கிரசுக்குத் தான் அதிக வாக்குகள் கிடைத்தன. இந்த தேர்தல் தோல்வி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தோல்விக்கு பினராயி விஜயன் தான் காரணம் என்று சில தலைவர்கள் வெளிப்படையாகவே கூறி வருகின்றனர்.
Advertisement

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களான தாமஸ் ஐசக், ஜி. சுதாகரன் உள்பட தலைவர்கள் பினராயி விஜயனின் மக்கள் விரோத நடவடிக்கைகள் தான் தோல்விக்கு காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் கமிட்டி கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலும் பினராயி விஜயனுக்கு எதிராக பெரும்பாலான தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். பினராயி விஜயனின் கைவசம் உள்ள உள்துறை சரியாக செயல்படவில்லை என்றும், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, முறையாக ஓய்வூதியம் வழங்காதது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டன. ஆனால் தலைவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் பினராயி விஜயன் எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Advertisement

Related News