தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மக்களவை தேர்தலில் மோசமான தோல்வி; சேலம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம்

சென்னை: தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில் நடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் அபார வெற்றியை பெற்றது. அதிமுக மற்றும் பாஜக ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை. இருப்பினும் அதிமுகவின் வாக்குகள் 22 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. ஆனால் தென் தமிழ்நாட்டில் வலிமையான கட்சியாக இருந்த அதிமுக, இம்முறை சறுக்கியுள்ளது. தென் தமிழ்நாட்டில் அதிமுக 7 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட்டது. அதில் 5 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்திருக்கின்றனர்.
Advertisement

அதேபோல் 4 தொகுதிகளில் அதிமுக 3வது இடத்திற்கும், கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக 4வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. இது அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா உள்ளிட்ட மூவரும் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். தென் தமிழ்நாட்டில் முக்குலத்தோர் வாக்குகளை இவர்கள் மூவர் மூலமாக அதிமுக அறுவடை செய்து வந்தது. ஆனால் மூவரும் இப்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக சரிவை சந்தித்துள்ளது. ஓபிஎஸ்-க்கு பதிலாக அந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்ட ஆர்பி உதயகுமார், சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியை பெற்றுக் கொடுக்கவில்லை. இதுமட்டுமல்லாமல் அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதனிடையே எடப்பாடி பழனிசாமி சந்தித்த 9வது தேர்தலிலும் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் மீண்டும் அதிமுக ஒன்றுபடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நாளை நடக்கவுள்ளது. லோக்சபா தேர்தலில் அடைந்த தோல்வி குறித்து கட்சி நிர்வாகிகளிடையே ஆலோசிக்கப்படவுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement