தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

லோக் அதாலத் நீதிமன்றத்தில் சாதனை; ஒரே நாளில் 2.42 கோடி வழக்குகளுக்கு தீர்வு: ரூ.7,800 கோடிக்கு மேல் சமரசம்

புதுடெல்லி: நாடு தழுவிய அளவில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் கோடிக்கணக்கான வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டதால், நீதிமன்றங்களின் சுமை பெருமளவு குறைந்துள்ளது. நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளுக்கு விரைவாகவும், சமரச முறையிலும் தீர்வு காணும் நோக்கில், தேசிய சட்டப் பணிகள் ஆணையம் சார்பில் நாடு முழுவதும் தேசிய மக்கள் நீதிமன்றங்கள் (லோக் அதாலத்) நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2025ம் ஆண்டின் 3வது தேசிய மக்கள் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி சூர்யகாந்த் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நேற்று நடைபெற்றது.

Advertisement

நாடு முழுவதும் உள்ள தாலுகா, மாவட்ட மற்றும் உயர் நீதிமன்றங்களில் நடைபெற்ற இந்த மக்கள் நீதிமன்றத்தில், ஒரே நாளில் 2 கோடியே 42 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதில், நீதிமன்றத்திற்கு வருவதற்கு முந்தைய நிலையில் இருந்த 2 கோடியே 10 லட்சம் வழக்குகளும், ஏற்கெனவே நிலுவையில் இருந்த 32 லட்சத்து 10 ஆயிரம் வழக்குகளும் அடங்கும். இந்த வழக்குகளின் மூலம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இடையே ரூ.7,817 கோடிக்கும் அதிகமான தொகைக்கு சமரசம் எட்டப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி, வங்கிக் கடன், குடும்பத் தகராறுகள் (விவாகரத்து தவிர), தொழிலாளர் நலன், நிலம் கையகப்படுத்துதல், நுகர்வோர் குறைதீர், மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டண பாக்கி உள்ளிட்ட பல்வேறு வகையான வழக்குகள் இந்த மக்கள் நீதிமன்றத்தில் தீர்த்து வைக்கப்பட்டன. சாதாரண மக்களுக்கும் எளிதாகவும், விரைவாகவும் நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆண்டுக்கு நான்கு முறை நடத்தப்படும் இந்த மக்கள் நீதிமன்றங்கள், பொதுமக்களிடையே மாற்றுமுறை தீர்வு மையங்கள் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளதாக தேசிய சட்டப் பணிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Related News