தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழகத்தில் நாளை லோக் அதாலத் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணை: மாநில சட்டப்பணிகள் ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை தேசிய லோக் அதாலத் நடைபெற உள்ளது. தேசிய சட்ட பணிகள் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் தமிழகத்தில் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் லோக் அதாலத் நடத்தப்பட்டு வருகிறது. இந்த லோக் அதாலத்தில் தீர்வு எட்டக்கூடிய வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

Advertisement

அதன்படி நாளை (13ம் தேதி) தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய லோக் அதாலத் நடைபெற உள்ளது. இந்த லோக் அதாலத்தில் செக் மோசடி வழக்குகள், தொழிலாளர் பிரச்னை தொடர்பான வழக்குகள், மின்சாரம், தண்ணீர் கட்டணம் தொடர்பான வழக்குகள், ஜீவனாம்சம் உள்ளிட்ட குடும்பநல வழக்குகள், சிவில் வழக்குகள் என 2 லட்சத்து 12,329 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது.

இதற்காக உயர் நீதிமன்றத்தில் 6 அமர்வுகளும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 3 அமர்வுகளும், மாவட்டம் மற்றும் தாலுகா அளவிலான நீதிமன்றங்களில் 504 அமர்வுகளும் ஏற்படுத்தப்படுகின்றன. இந்த தகவலை தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணை குழுவின் உறுப்பினர் செயலர் எஸ்.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வழக்குகள் லோக் அதாலத்தில் தீர்வு காணப்பட்டால் அதுவே இறுதியானது. அதன் மீது எந்த நீதிமன்றத்திலும் முறையீடு ெசய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement