தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.13,000 கோடி கடன் மோசடி நீரவ் மோடி சகோதரர் அமெரிக்காவில் கைது: சிபிஐ, ஈடி கோரிக்கையால் அதிரடி

Advertisement

புதுடெல்லி: ரூ.13,000 கோடி வங்கி கடன் மோசடி குற்றவாளி நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது மாமா மெகுல் சோக்சி மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிந்தது. நீரவ் மோசடி லண்டனுக்கும், மெகுல் சோக்சி ஆன்டிகுவாவிலும் தஞ்சமடைந்தனர். லண்டன் போலீசார் கடந்த 2019 மார்ச்சில் நீரவ் மோடியை கைது செய்து அங்கு சிறை வைத்தனர்.

இந்நிலையில், இதே வழக்கில் சம்மந்தப்பட்ட நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி (46) அமெரிக்காவில் பதுங்கியிருப்பது தெரியவந்த நிலையில் அவரை நாடு கடத்த சிபிஐ, அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேஹல் மோடியை அமெரிக்க போலீசார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். நேஹல் மோடி மீது 2 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை வரும் 17ம் தேதி விசாரிக்கப்பட உள்ளது. அப்போது நேஹல் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement