தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையின் புதுமை: 2 மருத்துவமனைகளுக்கு இடையே இணை மாற்ற அறுவை சிகிச்சை

கோவை: நாட்டிலே முதன்முறையாக இரு மருத்துவமனைக்கு இடையே இணைமற்று, கல்லீரல் அறுவை சிகிச்சை கோவையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வழக்கமாக ஒரே குடும்பத்தினரை சேர்ந்தவர்கள் இடையில்தான் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கோவையில் உள்ள ஜெம் மற்றும் ராமகிருஷ்ணா மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த இருவருக்கு கல்லீரல் மாற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் மனைவிகள் கல்லீரல் தானமளிக்க முன்வந்த போது ரத்தவகை பொருந்ததால் அதை சாத்தியமற்றது என்று தெரியவந்தது.

இந்த சூழலில் தானமளிக்கும் இருவரும் கல்லீரல்களையும் மாற்று நோயாளிகளுக்கு பொருத்த திட்டமிடப்பட்டது. இதற்காக தமிழ்நாடு அரசு மற்றும் நீதிமன்றத்தின் அனுமதியை பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அனுமதியை கிடைத்ததை அடுத்து, இரு மருத்துவமனைகளிலும் ஒரே நேரத்தில் இருவரின் மனைவிகள் கல்லீரல்கள் பெறப்பட்டு இணை மாற்ற கல்லீரல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. 27 லட்சம் ரூபாய் செலவாகும் அறுவை சிகிச்சைகள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நடந்துள்ளது. அத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு தேவையான மருந்துகளும் கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.