தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தமிழ்நாட்டின் வாழ்வாதாரம் காக்க தூத்துக்குடியிலிருந்து இன்று பிரசாரம் தொடங்குகிறார் வைகோ: 20ம் தேதி சென்னையில் முடிக்கிறார்

சென்னை: மதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் 8 இடங்களில் தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களைக் காக்க, ஜனநாயகத்தைப் பாதுகாக்க, மதச்சார்பின்மையை நிலைநிறுத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் பிரசார கூட்டங்கள் இன்று(9ம்தேதி) தூத்துக்குடியில் தொடங்குகிறது. இந்த பிரசார கூட்டம் ஆகஸ்ட் 20ம்தேதி சென்னையில் நிறைவடைகிறது.

அதன் இன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் வெளியேற்றம் என்ற தலைப்பில் பிரசார கூட்டம் நடக்கிறது. 10ம்தேதி கடையநல்லூரில் மதச்சார்பின்மையும் கூட்டாட்சியும் என்ற தலைப்பிலும், 11ம்தேதி கம்பத்தில், முல்லைப் பெரியாறும், நியூட்ரினோவும் என்ற தலைப்பிலும், 12ம்தேதி திண்டுக்கல்லில் விவசாயிகள், மீனவர்கள் துயரம் என்ற தலைப்பிலும் நடக்கிறது.

வரும் 13ம்தேதி கும்பகோணத்தில் மேகதாதுவும், மீத்தேனும் என்ற தலைப்பிலும், 14ம்தேதி நெய்வேலியில், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் என்ற தலைப்பிலும், 18ம்தேதி கோவை சூலூரில் இந்தி ஏகாதிபத்தியம் என்ற தலைப்பிலும், 20ம்தேதி சென்னை திருவான்மியூரில் சமூக நீதியும், திராவிட இயக்கமும் என்ற தலைப்பிலும் பிரசார கூட்டங்கள் நடக்கிறது. இந்த கூட்டங்களில் வைகோ தலைமை உரையாற்றுகிறார். அதேபோன்று, அனைத்துக் கூட்டங்களிலும் மதிமுக பொருளாளர் மு.செந்திலதிபன், கவிஞர் மணிவேந்தன் உரையாற்றுவார்கள்.

Related News