தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுபான ஊழல் வழக்கில் தொடர்புடையவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்ய ஆந்திரா அரசு அதிரடி உத்தரவு: மாஜி எம்எல்ஏ உட்பட 3 பேர் மீண்டும் கைதாகின்றனர்

திருமலை: ஆந்திர மாநிலத்தில் கடந்த ஆட்சியின்போது நடந்த மதுபான ஊழல் வழக்கில் சந்திரகிரி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி, அவரது மகன் மோஹித் ரெட்டி, கேவிஎஸ் இன்ப்ரா எம்டி செவிரெட்டி லட்சுமி ஆகியோரின் பெயரில் உள்ள சொத்துக்கள், செவிரெட்டியின் மற்றொரு மகன் ஹர்ஷித் ரெட்டியின் சொத்துக்களை முடக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் முன்னாள் எம்எல்ஏ செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி குடும்பத்தினர் மதுபான ஊழல் மூலம் மது தொழிற்சாலைகளிடம் இருந்து பெற்ற கமிஷன்கள் மூலம் பெரும் சொத்துக்களை வாங்கி உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. செவிரெட்டி குடும்பத்தினர் ரூ.54.87 கோடியை கருப்புப் பணமாக மாற்றியுள்ளனர். இதன் மூலம் திருப்பதி, நெல்லூர் மற்றும் சித்தூர் மாவட்டங்களில் அதிகாரத்தின் ஆதரவுடன் மோசடி நில பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதாக சிஐடி அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Advertisement

இதனால் ஊழல் மற்றும் குற்றத் தடுப்பு சட்டங்களின் பிரிவுகளின் கீழ் சொத்துகளை பறிமுதல் செய்து மேலும் நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவுகளை உள்துறை முதன்மை செயலாளர் குமார் விஸ்வஜித் பிறப்பித்துள்ளார். இதனிடையே தனுஞ்சய ரெட்டி, கிருஷ்ணமோகன் ரெட்டி, பாலாஜி கோவிந்தப்பா ஆகியோருக்கு ஏசிபி (ஊழல் தடுப்பு) நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. கடந்த மாதம் 3 பேரும் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்த நிலையில், 3 பேரின் ஜாமீனை ரத்து செய்ய சிஐடி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது 3 பேரின் இடைக்கால ஜாமீனை உயர் நீதிமன்றத்தில் ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் 3 பேரும் மீண்டும் கைது செய்யப்பட உள்ளனர்.

Advertisement

Related News