தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுபானங்களை கையிருப்பு வைக்க மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் உத்தரவு

சென்னை: இந்தாண்டு தீபாவளி பண்டிகை வாரத்தின் தொடக்க நாளான திங்கட்கிழமை (அக்.20) வருகிறது. அதற்கு முந்தைய இரண்டு நாட்களான சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் மதுபான கடைகளில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் பண்டிகைக்கால தேவையை கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கையிருப்பில் வைக்க அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

Advertisement

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தை பொறுத்தவரை 4,829 மதுபான கடைகள் முறைப்படி உரிமங்களுடன் இயங்கி வருகின்றன. அதன்படி, தினசரி விற்பனையில் இருந்து பண்டிகை நாட்களில் சற்று கணிசமாக விற்பனை என்பது செய்யப்படும்.

அந்தவகையில் இந்தாண்டு வார இறுதி விடுமுறை தினங்கள் மற்றும் தீபாவளி பண்டிகை தொடர்ந்து வருவதால் மதுபானங்களை கையிருப்பில் வைக்கவும், சுற்றுலா இடங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் கூடுதல் இருப்பு வைக்க வும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகப்படியாக விற்பனையாகும் மதுபான வகைகளின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement