தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

லிபுலேக் கணவாய் வழியாக சீனாவுடன் வர்த்தகம் நேபாளத்தின் ஆட்சேபனையை இந்தியா நிராகரிப்பு

புதுடெல்லி: லிபுலேக் கணவாய் வழியாக வர்த்தகத்தை தொடங்குவதற்கு இந்தியா மற்றும் சீனா எடுத்த முடிவுக்கு நேபாளம் தெரிவித்த ஆட்சேபனையை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. லிபுலேக் கணவாய் வழியாக எல்லை வர்த்தகத்தை மீண்டும் தொடங்குவதற்கு இந்தியாவும் சீனாவும் செவ்வாயன்று ஒப்புக்கொண்டன. இதற்கு நேபாள வெளியுறவு துறை அமைச்சகம் நேற்று முன்தினம் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

Advertisement

இந்த பகுதி நேபாளத்தின் பிரிக்க முடியாத பகுதி என்று நேபாளம் தெரிவித்துள்ளது. நேபாளத்தின் இந்த பிராந்திய உரிமைகோரலை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இது குறித்து வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில்,‘‘லிபுலேக் கணவாய் வழியாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை வர்த்தகத்தை மீண்டும் தொடங்குவது தொடர்பான வெளியுறவு துறை அமைச்சகத்தின் கருத்துக்களை நாங்கள் கவனித்தோம்.

இது தொடர்பாக எங்களது நிலைப்பாடு நிலையானது, தெளிவானது, லிபுலேக் கணவாய் வழியாக இந்தியா- சீனா இடையிலான எல்லை வர்த்தகம் 1954ம் ஆண்டு தொடங்கி பல தசாப்தங்களாக நடந்து வருகின்றது. கொரோனா தொற்று மற்றும் பிற காரணங்களால் சமீபத்திய ஆண்டுகளில் வர்த்தகம் தடைப்பட்டது. இரு தரப்பினரும் இப்போது மீண்டும் அதனை தொடங்க ஒப்புக்கொண்டுள்ளோம்” என்றார்.

Advertisement

Related News