தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வண்டலூர் பூங்காவில் மாயமான சிங்கம் மீண்டும் கூண்டுக்கு திரும்பியது: வண்டலூர் உயிரியில் பூங்கா அதிகாரிகள் தகவல்

சென்னை :சென்னை அருகே வண்டலூர் உயிரியல் பூங்காவில் லயன் சபாரி பகுதியில் புதிதாக உலாவ விடபட்ட சிங்கம் ஒன்று கடந்த மூன்று தினங்களாக உணவு அருந்தும் இடத்திற்கு வராமல் மயமானது.

Advertisement

இதை தொடர்ந்து வண்டலூர் உயிரியில் பூங்காவில் கண்காணிப்பு கேமராக்கள் தெர்மல் கேமராக்கள் மூலமாக இந்த சிங்கதை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்கள். அது மட்டும் இன்றி உயிரியில் பூங்காவின் பணியாளர்களும் 25 ஏக்கர் பரப்பளவில் அந்த சிங்கம் உலவிடப்பட்ட பகுதி முழுவதுமாக ஆய்வினை மேற்கொண்டுவந்தனர்.

இதில் 25 ஏக்கர் பரப்பளவில் சுற்றுவட்டார பகுதியில் அந்த சிங்கத்தின் நடமாட்டம் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ட்ரோன் கேமராக்கள் மூலமாகவும் சிங்கத்தை தீவீரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவந்தனர். இருப்பினும் கடந்த மூன்று நாட்களாக இந்த சிங்கம் உணவு அருந்தும் இடத்திற்கு வராததால் ஊழியரிடம் பரபரப்பு நேர்ந்து வந்தது.

மேலும் இந்த சிங்கத்தை தேடுவதற்காக ஜேசிபி எந்திரங்கள் மூலமாக புதர்களில் தேடி வந்தனர். அதனை தொடர்ந்து இன்று மாலையில் அந்த சிங்கம் ட்ரோன் கேமராவில் தென்பட்டது. அதனை தொடர்ந்து ட்ரோன் மூலமாக அந்த சிங்கத்தை தொடர்ந்து. கண்காணித்து வந்த பொழுது இந்த பகுதியில் தற்சமையம் இடி மின்னலுடன் மழை பெய்தது.

பெரிய இடி சத்தம் இந்த பகுதியில் கேட்டதை தொடர்ந்து. அந்த சிங்கம் ஒரு புதருக்குள் இறங்கி வெளியை வந்து வேகமாக உணவு அருந்த ஓடும் காட்சிகள் தற்போது ட்ரோனில் பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து வண்டலூர் உயிரியில் பூங்கா அதிகாரிகள் சிங்கம் திரும்பி வந்துவிட்டதாக அதிகார பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Advertisement