தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நான் தெனாவட்டாக பேசமாட்டேன்; மன்னிப்பு கடிதம் கேட்க எடப்பாடி பழனிசாமி யார்?: கொதிக்கும் ஓபிஎஸ்

அவனியாபுரம்: மன்னிப்பு கடிதம் கேட்க எடப்பாடி பழனிசாமி யார்? என்று ஓபிஎஸ் கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை செல்ல மதுரை விமான நிலையத்துக்கு நேற்று வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி: நான் ஒருபோதும் அதிமுகவுக்கு உண்மையாக இருந்தது கிடையாது என எடப்பாடி கூறியுள்ளார். இதற்கு நீண்ட விளக்கத்தை நேற்று அளித்திருக்கிறேன். கட்சி நன்மை கருதி இதற்கு மேல் விளக்கம் சொல்ல முடியாது. அவரைப் போல் நான் தெனாவட்டாகவோ, சர்வாதிகாரத்தோடு பேசமாட்டேன் என்பது நாட்டு மக்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் நன்றாக தெரியும்.
Advertisement

கட்சியை இணைப்பது தான் ஒரே வழி. இனி வரக்கூடிய ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றி பெற வேண்டுமென்றால் கட்சி இணைய வேண்டும். அவ்வாறு கட்சி இணையாமல் இருந்தால் அந்த வெற்றி சாத்தியமில்லை என்பது என்னுடைய கருத்து மட்டுமல்ல, தொண்டர்களின் கருத்தும் அது தான். என்னை மன்னிப்பு கடிதம் கொடுக்கச் சொல்வதற்கு அவர் யார்?. பொதுச்செயலாளர் வழக்கு இன்னும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் போட்டியிடவில்லை. அதனால் தான் இரு இலையுடன் கூடிய மாங்கனி அங்கு போட்டியிடுகிறது என்று சொன்னேன். அதுதான் நடக்கப் போகிறது. அதிமுக தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். உறுதியாக ஒரு தொண்டர் தான் அதிமுக தலைமையை ஏற்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News