தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

களக்காடு அருகே ஊருக்குள் உலா வரும் சிறுத்தை: பொதுமக்கள் அச்சம்

களக்காடு: களக்காடு அருகே ஊருக்குள் உலா வரும் சிறுத்தையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள புலி, சிறுத்தை, கரடி, யானை, செந்நாய், கடமான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி மலையடிவார கிராமங்களில் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்நிலையில் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் வடவூர்பட்டி சாலையில் பச்சை ஆற்றின் கரையோரங்களில் இன்று சிறுத்தையின் கால் தடம் பதிவாகி இருந்தன.

Advertisement

இதைப்பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் அங்கு சென்று கால் தடங்களை ஆய்வு செய்து வருகின்றனர். சிறுத்தை நடமாட்டம் காணப்பட்ட பகுதியில் ஏராளமான விளை நிலங்கள் உள்ளன. விவசாயிகள் விளைநிலங்களில் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே சிறுத்தை நடமாட்டம் காணப்படுவதால் விவசாயிகளும், கிராம மக்களும் அச்சம் அடைந்துள்ளனர். எனவே ஊருக்குள் உலா வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement