தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குடியிருப்புக்குள் புகுந்து நடமாடிய சிறுத்தை: சூலூர் அருகே பொதுமக்கள் பீதி

சூலூர்: சூலூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்து சிறுத்தை நடமாடிய காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் கடந்த வாரம் தனியார் தொழிற்சாலைக்குள் புகுந்த சிறுத்தை நடந்து சென்ற காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. தொழிற்சாலை நிர்வாகத்தினர் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் 1 வாரம் காலம் தாழ்த்தினர். இந்த நிலையில் இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். கடந்த 2 நாட்களாக சிறுத்தை அதே பகுதியில் இருக்கும் என்ற சந்தேகத்தின் பேரில் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியும், பட்டாசுகளை வெடித்தும் அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement

இந்நிலையில் தொழிற்சாலைக்கு எதிர்புறம் அதாவது திருச்சி சாலைக்கு தென்புறம் உள்ள பிரபல ஓட்டல் பகுதியில் இன்று அதிகாலை சுமார் 1 மணி அளவில் சிறுத்தை நடமாடி உள்ளது. அங்குள்ள சாய்கிருபா அவென்யூவில் புகுந்த சிறுத்தை அங்கிருந்த விநாயகர் கோயிலில் படுத்திருந்தது. இதனால் பயந்து போன செக்யூரிட்டி விசில் ஊதி சிறுத்தையை துரத்தி உள்ளார். அங்கிருந்து வெளியே வந்த சிறுத்தை அந்த பகுதியில் நடந்து செல்லும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் சிறுத்தை இருப்பதாக பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மீண்டும் சிறுத்தை நடமாட்டம் தொடர்பான தகவல்களால் பொதுமக்கள் பீதியுடன் நடமாடி வருகின்றனர்.

சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடந்த வனத்துக்குள் விர வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement