தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊட்டி அருகே வீட்டுக்குள் நுழைந்து நாயை தூக்கிச் செல்லும் சிறுத்தை: சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

Advertisement

ஊட்டி: ஊட்டி அருகே குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை நுழைந்து வளர்ப்பு நாயை தூக்கிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பெரும்பாலான கிராம பகுதிகளில் சிறுத்தை, கரடி, புலி, யானை, காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக சமீப நாட்களாக குடியிருப்புகளில் வளர்க்கப்படும் நாய்களை சிறுத்தைகள் சர்வ சாதாரணமாக வேட்டையாடி செல்கின்றன. இதனால், இரவு நேரங்களில் நடமாடவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இந்நிலையில், ஊட்டி ரோஸ் மவுண்ட் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று குடியிருப்புக்குள் நுழைந்து அங்கிருந்த வளர்ப்பு நாயை தூக்கி செல்கிறது.

நாய் அலறும் சத்தத்தை கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது, நாயை அடித்துக் கொன்று சிறுத்தை தூக்கி சென்றுள்ளது. இதனைக் கண்டு அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். நாயை அடித்துக் கொன்று சிறுத்தை தூக்கிச் செல்லும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எனவே, குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News