தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சடங்கே சம்பவமா மாறி போச்சு எலுமிச்சையால் வந்த விபரீதம் அப்பளமாக நொறுங்கிய புதிய கார்

புதுடெல்லி: டெல்லியில் புதிதாக வாங்கிய காரை எலுமிச்சை பழம் மீது ஏற்ற முயன்றபோது ஷோரூமிலிருந்து கீழே விழுந்து நொறுங்கிய சோகம் அரங்கேறி உள்ளது. கிழக்கு டெல்லியை சேர்ந்த பிரதீப், மானி பவார் தம்பதி புதிய கார் வாங்க முடிவு செய்து, மஹிந்திரா கார் விற்பனை ஷோரூமுக்கு சென்றனர். அந்த ஷோரூம் முதல்மாடியில் இருந்தது. அங்கு, ரூ.27 லட்சம் மதிப்பிலான தார் வகை காரை ஆசையுடன் வாங்கினர்.

Advertisement

பின்னர் இருவரும் கார் நல்லபடியாக ஓட வேண்டும் என வேண்டி, நான்கு சக்கரங்களுக்கு அடியிலும் எலுமிச்சை பழத்தை வைத்தனர். பிரதீப்பும், மானி பவாரும் ஏறி, மானி பவார் காரை ஓட்டுவதற்காக இருக்கையில் அமர்ந்தார். அவர்களுடன் கார் ஷோரூமின் ஊழியர் விகாஸ் என்பவரும் காருக்குள் ஏறி அமர்ந்தார். பின்னர் காரை மெதுவாக ஓட்டி எலுமிச்சை பழம் மீது ஏற்றும்படி ஊழியர் சொன்னார்.

ஆனால் புதிய கார் வாங்கிய மகிழ்ச்சியில் திளைத்திருந்த மானி பவார் வேகமாக காரின் ஆக்சிலேட்டரை மிதித்துள்ளார். இதனால் மின்னல் வேகத்தில் பறந்த கார் ஷோரூமின் கண்ணாடியை உடைத்து கொண்டு 15 அடி உயரத்தில் இருந்து தலைகுப்புற கீழே விழுந்து அப்பளமாக நொறுங்கியது. இந்த விபத்தில் மூன்று பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் அங்கிருந்தோரை சோகத்தில் ஆழ்த்தியது.

Advertisement