தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சட்டப்பேரவையில் பேச அனுமதிப்பதில் மோதல்: ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ பேச அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு

Advertisement

 

 

சென்னை: பாமக சட்டமன்றக் குழுத் தலைவராக ஜி கே மணியை மாற்றக்கோரி சபாநாயகரிடம் கொடுத்த கடிதங்களின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என அன்புமணி தரப்பு ஆதரவு எம்எல்ஏக்கள் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தொடர்ந்து முழக்கம் எழுப்பி வந்தனர். இந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதிநாளான இன்று கோல்ட்ரிப் மருந்து விவகாரம் தொடர்பாக கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தில் ராமதாஸ் தரப்பு எம் எல் ஏ அருளுக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி தரப்பு எம்எல்ஏக்கள் மூவரும் சபாநாயகரின் இருக்கை முன்பாக கீழே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது விளக்கமளித்த சபாநாயகர், சட்டப்பேரவையை பொறுத்தவரை எதிர்க்கட்சி வரிசையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு மட்டும் தான் குறிப்பிட்ட இடத்தில் இருக்கை ஒதுக்குவதற்கான விதிமுறை இருப்பதாகவும், மீதமுள்ள உறுப்பினர்களுக்கு இருக்கை ஒதுக்குவது தன்னுடைய முடிவு எனவும், பாமகவின் உட்கட்சி பிரச்னைகளை சட்டமன்றத்திற்கு வெளியே வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் 8 உறுப்பினர்கள் இருக்கும் கட்சி ஒரு குழுவாக மட்டுமே செயல்படும் எனவும், தன்னிடம் கொடுத்த கடிதம் பரிசீலனையில் இருக்கும் நிலையில் அன்புமணி தரப்பு எம் எல் ஏக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என கேட்டுக் கொண்டார். ஆனால் தொடர்ச்சியாக அன்புமணி தரப்பு ஆதரவு எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்ட நிலையில், உடனடியாக இருக்கைக்கு செல்லவில்லை என்றால் நடவடிக்கை எடுப்பேன் என சபாநாயகர் கடுமையான எச்சரிக்கை விடுத்தார். தங்களின் கோரிக்கையை பரிசீலிக்காத சபாநாயகரின் செயல்பாடுகளை கண்டித்து அன்புமணி ஆதரவு எம் எல் ஏக்கள் வெளிநடப்பு செய்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

Advertisement

Related News