தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அக்.14ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காசா இனப்படுகொலையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அக்.14ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காசா இனப்படுகொலையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் இரண்டு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 67,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். காசாவில் நடைபெறும் தாக்குதலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். காசாவில் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டுமெனக்கூறி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisement

சென்னை எழும்பூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். கி.வீரமணி, வைகோ, செல்வப்பெருந்தகை, திருமாவளவன், ஜவாஹிருல்லா, மு.வீரபாண்டியன், பெ.சண்முகம், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; காசாவில் இஸ்ரேல் நிகழ்த்தும் இனப்படுகொலை உலக மக்களின் மனதை உலுக்குகிறது. காசா வில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் கடந்த ஓராண்டாக அதிகரித்து வருகிறது. காசா வில் ஓராண்டில் பெரும் பகுதி அழிந்துவிட்டது.

மனிதநேய பண்போடு ஒருங்கிணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. பன்னாட்டு சட்டங்களையும், ஐக்கிய நாடுகளின் சட்டங்களையும் இஸ்ரேல் மீறியுள்ளது. உணவுப்பொருள் லாரியை எதிர்பார்த்து காத்திருந்தவர்களில் 45 பேரை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொன்றது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸாவில் 50,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.காசாவில் நிகழும் இனப்படுகொலையை மனிதநேயம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிக்கின்றனர். பாலஸ்தீன மக்களுக்கு தமிழகம் மனப்பூர்வ ஆதரவளிக்கிறது. காசா வில் நடைபெறும் இரக்கமற்ற படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும்

அக்.14ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காசா இனப்படுகொலையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். காசா படுகொலையை தடுத்து நிறுத்த ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தப்படும் என்று கூறினார்.

Advertisement

Related News