தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காசாவில் 50 குழந்தைகள் உட்பட 84 பாலஸ்தீன மக்கள் பலி; இஸ்ரேலை திருப்பி தாக்கிய லெபனான்: பதற்றம் அதிகரிப்பால் விண்ணை முட்டும் சைரன் சத்தம்

Advertisement

ஜெருசலேம்: இஸ்ரேல் மீது லெபனான் ராக்கெட் குண்டுவீசியதால் தீரா நகரில் வீடு சேதமடைந்தது. 7 பேர் காயமடைந்தனர். இஸ்ரேலில் பதற்றம் அதிகரிப்பால் விண்ணை முட்டும் சைரன் சத்தம் கேட்கிறது. கடந்த ஓராண்டுக்கு மேலாக காசாவின் ஹமாஸ் அமைப்பின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் நேற்று வரை 43,259 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர்; 1,01,827 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 2,897 பேர் கொல்லப்பட்டனர். 13,150 பேர் காயமடைந்துள்ளனர்; லெபனானில் 30 பேர் பலியானதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் வடக்கு காசாவின் குடியிருப்புகள் மீது இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 84 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டதாக காசா அரசு ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மத்திய இஸ்ரேலுக்கு உட்பட்ட தலைநகர் டெல் அவிவின் வடக்குப் பகுதிகயை நோக்கி லெபனானில் இருந்து மூன்று வான்வழி ஏவுகணை ராக்கெட்டுகள் வீசப்பட்டன. அவற்றை இஸ்ரேல் ராணுவம் இடைமறித்து தாக்கியது. இருந்தும் சில ராக்கெட்டுகள் மத்திய இஸ்ரேல் நகரத்தை தாக்கியது. குறிப்பாக டெல் அவிவ் நகரின் வடகிழக்கில் உள்ள தீரா மற்றும் ஹஷரோன் நகரங்களின் மீது ராக்கெட்டுகள் வீசப்பட்டதால் கட்டிடங்களுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டது. உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட செய்தியின்படி, தீராவில் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல் ‘தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய அரபு இஸ்ரேலின் தீரா நகரின் மீது லெபனானில் இருந்து வீசப்பட்ட ராக்கெட்டுகள் தாக்கியதில் 7 பேர் காயமடைந்தனர் என்றும், அவர்களுக்கு தீராவில் இருக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இவர்களில் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லெபனானில் இருந்து மத்திய இஸ்ரேல் மீது ராக்கெட்கள் வீசப்படுவதால், டெல் அவிவ் புறநகர் பகுதியான ஹெர்ஸ்லியா மற்றும் மத்திய இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்படுகின்றன. ராணுவம் மக்கள் வசிக்கும் பகுதியில் தீவிர ரோந்தில் ஈடுபட்டு வருகிறது.

அமெரிக்க தேர்தலுக்கு பின் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்?

கடந்த அக். 1ம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை புறக்கணிப்பது இஸ்ரேலுக்கு எதிரான தோல்வியை ஒப்புக்கொள்வதற்குச் சமம் என்று ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி தெரிவித்தார். இந்நிலையில் அமெரிக்க தேர்தலுக்குப் பிறகு இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தக் கூடும் என்று புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 5ம் தேதி நடக்கும் நிலையில், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா கமேனியின் நெருங்கிய உதவியாளரான முகமது கோல்பைகெனி அளித்த பேட்டியில், ‘ஈரானின் சில பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு இஸ்ரேலுக்கு உரிய நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும்’ என்றார். இதுகுறித்து மூன்று ஈரான் அதிகாரிகளை மேற்கோள் காட்டி, ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழும் செய்தி வெளியிட்டுள்ளது.

Advertisement

Related News