தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மனித உயிர்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்க விஜய்: திருமுருகன் காந்தி அட்வைஸ்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே, சிலுக்குவார்பட்டியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் கருத்தரங்க கூட்டம் நேற்று நடைபெற்றது.

Advertisement

இதில், கலந்து கொண்ட மே 17 இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது: கரூர் பிரசார ஏற்பாட்டை தவெக நிர்வாகிகள் மிக மோசமான வகையில் செய்திருந்தனர். விஜய் முதலில் மனித உயிர்களை மதிக்க கற்றுக் கொள்ளவேண்டும். அவருக்காக வந்தவர்கள் பாதிக்கப்பட்டு இறந்தபோது உடனடியாக சந்திக்காமல், சமூக வலைதளத்தில் கூட வருத்தம் தெரிவிக்காமல் தனது உயிர் மேலானது என தப்பியோடியது கடுமையான கண்டனத்திற்குரியது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மட்டுமின்றி, இரண்டாம் கட்ட தலைவர்களும் தலைமறைவாகியுள்ளது மக்களின் மீதுள்ள அக்கறையின்மையை காட்டுகிறது.

இப்படிப்பட்ட நிகழ்வு தமிழ்நாட்டில் இதுவரை நடந்ததே இல்லை. இவர்கள் தமிழ்நாட்டின் நலனுக்காக எதை செய்துவிட போகிறார்கள். கோழைத்தனமான கட்சித் தலைமை என்பதையே இது காட்டுகிறது. தவெக ரசிகர் மன்றமாக மட்டுமே உள்ளது. இச்சம்பவத்தில் விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். தன் மீது தவறில்லை எனில் நீதிமன்றத்தில் நிரூபித்து கொள்ளட்டும் என்றார்.

Advertisement